Sunday, 26 August 2012

இறைவனின் கருணை


என்னிடம் 
அது வேண்டும் என்பர் 
இது இல்லை என்பர் 
என்னைச்  
சிலர் நல்லவன் என்பர் 
பலர் கெட்டவன் என்பர் 
உன் கருணையே 
கருணை என்பர் 
அவர்களே 
மீண்டும் என்னைக்
கருணையற்றவன் என்பர் 
நான் இல்லவே இல்லை 
என்பர் சிலர்  
நான் யார்?
'எல்லாம் வல்லப் பரம் பொருள் நான்'!
பல முறை என்னைப் பழிப்பவரைப் 
பார்த்து விடைக் கூற முயல்வேன் 
ஆயினும் நான் இல்லை எனப் பழிப்பவரின் 
நம்பிக்கையை சிதைக்க முடியவில்லை 
ஆதலால் கல்லாகவே இருக்கின்றேன் 
ஏனெனில் நான் தான் 
'எல்லாம் வல்ல பரம் பொருள் ஆயிற்றே'! 

2 comments: